Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : டவுணில் எல்லை பாதுகாப்பு படையினரின்,கொடி அணிவகுப்பு! மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ள, தமிழக சட்டமன்ற தேர்தல், வாக்குப்பதிவு நாளின் போது, திருநெல்வேலி மாவட்ட வாக்காளர்கள், அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கான, அசைக்க முடியாத நம்பிக்கையை, அவர்களிடம் ஏற்படுத்திடும் வகையில், மாநகர் பகுதி உட்பட, மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும், காவல்துறை சார்பில், கொடி அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மானூர், தாழையூத்து, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில், கொடி அணிவகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி டவுணில், மாநகர காவல்துறையினர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள, எல்லைப்பாதுகாப்பு படையினர் பங்கேற்ற, போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மாநகர காவல், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கான, துணை ஆணையர் வி.ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற, இந்த அணிவகுப்பில், திருநெல்வேலி டவுண் உதவி ஆணையர் இ.சதீஷ் குமார், பாளையங்கோட்டை ஆயுதப்படை உதவி ஆணையர் முத்தரசு, திருநெல்வேலி டவுண் காவல் ஆய்வாளர் ராமேசுவரி ஆகியோர் உட்பட, உள்ளூர் போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் என, நூற்றுக்கும் அதிகமானோர், தங்களுடைய கைகளில், துப்பாக்கிகளை ஏந்தியபடி, அணிவகுத்து கம்பீரமாய் வந்ததை, வழிநெடுகிலும், மாநகர மக்கள், தங்களுடைய கண்களால் கண்டு, வியந்தனர்.